ஸ்வாமி அலங்காரம் செய்வது எப்படி

வணக்கம்
ஆலய  மூலவர் மூர்த்திகளுக்கு  அலங்காரம் செய்ய  தெரியாத அர்ச்சகர்களை மக்கள் விரும்புவதில்லை.இப்போதெல்லாம் கோயில் அர்ச்சகரின் அலங்கார திறமையை வைத்தே அர்ச்சகர் பணிக்கு தேர்ந்தெடுக்கும் அளவுக்கு ஸ்வாமி அலங்காரத்திற்கு முக்கியத்துவம் அதிகரித்துள்ளது.என்னிடம்  நிறைய அர்ச்சகர் நண்பர்கள் சலித்துக்கொள்ளும் ஒரே விஷயம், "இந்த ஸ்வாமிக்கு முகம்(காப்பு)வைப்பதும் கண் வரைவதும்தான்  எனக்கு சரியாக வருவதில்லை"என்பதுதான்.அவர்கள் அணைவருக்கும் நான் சொல்ல வருவது,  பலரும்  சந்தன காப்பு என்ற பெயரில் கருவரை திரையை மூடி உள்ளே ஸ்வாமியின் முகத்தை  ஈரப்படுத்தி சந்தன பொடியை  கையில் எடுத்து ஸ்வாமியின் முகத்தருகே வைத்து வாயால் உதி பொடியை ஸ்ப்ரே செய்வதை கண்டிருக்கிறேன்.  பாவம் அவர்கள் என்ன செய்வார்கள் அலங்காரம் சரியில்லை என்றால் அர்ச்சகர் வேலை காலி. அதனால்  அவ்வாறு செய்கின்றனர். அப்படி எல்லாம் செய்யவே வேண்டாம். நல்ல ஆர்வமும் சிறிது பயிற்சியும் இருந்தால் போதும் சிறப்பாக அலங்காரம் செய்யலாம்.
இந்த படங்களை காண்க

இந்த படங்களில் உள்ளபடி அலங்காரம் செய்ய தேவையான பொருட்கள்,  1.பச்சரிசி மாவு
2.மஞ்சள்தூள்
3.கண் மை
4.குங்குமம்
5.கண் வரைய ப்ரஷ்
6.நல்லெண்ணெய்
எப்படி செய்வது என்பதை அடுத்த பதிவில் காணலாம்.
:-:by  shri karthikeyan namboothri.


















Comments

Post a Comment

Popular posts from this blog

ஸ்வாமி அலங்காரம்-2