Posts

தினம் ஒரு தரிசனம்

Image
                          by:karthikeyan  namboothiri.

ஸ்வாமி அலங்காரம்-2

Image
அனைவருக்கும் வணக்கம்.முகம் வைக்க தேவையான பொருட்களை முந்தய பகுதியில் பார்த்தோம்.இப்பொழுது முகம் வைப்பது எப்படி என்று பார்ப்போம். முதலில் பச்சரிசி மாவுடன் சிறிது மஞ்சள்orகுங்குமம் கலந்து நீர் விட்டு பிசைய வேண்டும். கையில் ஒட்டாத பதத்தில் கெட்டியாக பிசைந்து, உருண்டையாக உருட்டவேண்டும்.பிறகு  அதை முகத்தில் வைத்து நீள வட்ட வட்டிவமாக செய்து  அதில் மேலிருந்து சில  அங்குலங்கள் நெற்றியாக விட்டு புருவத்திற்கு இரண்டு கட்டை விரல்களாலும் சரியான அளவில் அழுத்தி வில் போல் செய்து  மத்தியில் மத்தியில் நாசி போல் அழுத்தி கீழே வர வேண்டும். பிறகு கண் மையை நல்லெண்ணெய்யில் குலைத்து புருவமும் கண்களும் வரையலாம்.குங்குமம் குலைத்து உதடு வரைய வேண்டும்.நேரில் பயிற்சி பெற ஸ்ரீ மஹா வேத வித்யா பீடம்.

ஸ்வாமி அலங்காரம் செய்வது எப்படி

Image
வணக்கம் ஆலய  மூலவர் மூர்த்திகளுக்கு  அலங்காரம் செய்ய  தெரியாத அர்ச்சகர்களை மக்கள் விரும்புவதில்லை.இப்போதெல்லாம் கோயில் அர்ச்சகரின் அலங்கார திறமையை வைத்தே அர்ச்சகர் பணிக்கு தேர்ந்தெடுக்கும் அளவுக்கு ஸ்வாமி அலங்காரத்திற்கு முக்கியத்துவம் அதிகரித்துள்ளது.என்னிடம்  நிறைய அர்ச்சகர் நண்பர்கள் சலித்துக்கொள்ளும் ஒரே விஷயம், "இந்த ஸ்வாமிக்கு முகம்(காப்பு)வைப்பதும் கண் வரைவதும்தான்  எனக்கு சரியாக வருவதில்லை"என்பதுதான்.அவர்கள் அணைவருக்கும் நான் சொல்ல வருவது,  பலரும்  சந்தன காப்பு என்ற பெயரில் கருவரை திரையை மூடி உள்ளே ஸ்வாமியின் முகத்தை  ஈரப்படுத்தி சந்தன பொடியை  கையில் எடுத்து ஸ்வாமியின் முகத்தருகே வைத்து வாயால் உதி பொடியை ஸ்ப்ரே செய்வதை கண்டிருக்கிறேன்.  பாவம் அவர்கள் என்ன செய்வார்கள் அலங்காரம் சரியில்லை என்றால் அர்ச்சகர் வேலை காலி. அதனால்  அவ்வாறு செய்கின்றனர். அப்படி எல்லாம் செய்யவே வேண்டாம். ந...