அனைவருக்கும் வணக்கம்.முகம் வைக்க தேவையான பொருட்களை முந்தய பகுதியில் பார்த்தோம்.இப்பொழுது முகம் வைப்பது எப்படி என்று பார்ப்போம். முதலில் பச்சரிசி மாவுடன் சிறிது மஞ்சள்orகுங்குமம் கலந்து நீர் விட்டு பிசைய வேண்டும். கையில் ஒட்டாத பதத்தில் கெட்டியாக பிசைந்து, உருண்டையாக உருட்டவேண்டும்.பிறகு அதை முகத்தில் வைத்து நீள வட்ட வட்டிவமாக செய்து அதில் மேலிருந்து சில அங்குலங்கள் நெற்றியாக விட்டு புருவத்திற்கு இரண்டு கட்டை விரல்களாலும் சரியான அளவில் அழுத்தி வில் போல் செய்து மத்தியில் மத்தியில் நாசி போல் அழுத்தி கீழே வர வேண்டும். பிறகு கண் மையை நல்லெண்ணெய்யில் குலைத்து புருவமும் கண்களும் வரையலாம்.குங்குமம் குலைத்து உதடு வரைய வேண்டும்.நேரில் பயிற்சி பெற ஸ்ரீ மஹா வேத வித்யா பீடம்.